வாயுத் தொல்லை

11:06 முப இல் மே 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , ,

பொதுவாக வாயுத் தொல்லை என்றால் மக்களுக்கு ஞாபகம் வரக்கூடிய விஷயத்தைப் பற்றியதல்ல இப்பதிவு. ஆனாலும் வாயுத் தொல்லையால் அவதியுறுபவர்களுக்கும் என்னாலான ஆலோசணையை சொல்லிவிட்டு நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்வது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாயுத் தொல்லை யாருக்கு இருந்தாலும் அது மிகப் பெரிய தொல்லைதான். யாராலுமே சகித்துக் கொள்ள முடியாத சிரமம் இது. அவ்விதமான தொல்லை உங்களில் யாருக்காவது இருக்குமானால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். அது சமுதாயத்துக்கு நீங்கள் செய்கிற மிகப் பெரிய தொண்டாக இருக்கும். நல்ல மருத்துவராக பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம் லேகிய வியாபாரிகளையாவது நாடலாம்.

தருமமிகு சென்னை மக்களுக்கு என் இதயத்தில் எப்போதுமே சிறப்பான இடம் உண்டு. அதனால் சென்னையில் லேகியம் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தை உயிரினும் மேலான சென்னை மக்களுக்காக சிபாரிசு செய்கிறேன். கச்சேரி ரோடு டப்பா செட்டிக் கடைஎன்று பரவலாக அறியப்பட்ட சித்த மருத்துவ பார்மசியில் அனைத்து விதமான உடல் பிணிகளுக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆகவே வாயுத் தொல்லைக்கும் அங்கே மருந்து கிடைக்கலாம். வெறும் பதினைந்திலிருந்து இருபத்தைந்து ரூபாய் விலையில் நல்ல லேகியங்கள் கிடைப்பதாக பயனடைந்தவர்கள் சொல்லக் கேள்வி.

மயிலாப்பூர் கச்சேரி ரோடு தெரியாதவர்கள் சென்னை வாசிகளாக் இருக்கவே லாயக்கற்றவர்கள். அப்படிப் பட்டவர்களை ஊர் கடத்துமாறுமயிலை முண்டகக் கன்னியை வேண்டிக் கொள்கிறேன். கச்சேரி ரோடுக்கு செல்லும் சில பேருந்து வழித்தடங்களையும் சொல்கிறேன். தி.நகர், சைதாபேட்டை, சின்னமலை, கிண்டி, அடையாறு, மந்தைவெளி போன்ற இடங்களில் வசிப்பவர்கள் 5-பி யில் ஏறி, மயிலாப்பூர் குளம் நிறுத்தத்தில் இறங்கி வசதிக்குத் தக்கபடி கச்சேரி ரோட்டுக்கு செல்லலாம். காசுள்ளவர்கள் கால் டாக்சியில் செல்லலாம், செலவு செய்ய யோசிப்பவர்கள் காலே டாக்சி என்று நினைத்துக் கொண்டு நடையைக் கட்டலாம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் இருப்பவர்கள் பிபி-19ல் ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி (சத்யா ஸ்டுடியோ) பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 5-பி யில் செல்லலாம். திருவான்மியூர் வாசிகளுக்கு இரண்டு பேருந்து மாறுகிற சிரமம் இல்லை. 1ம் எண் (வெள்ளை போர்டு) பேருந்தில் லஸ் முணை சந்திப்பில் இறங்கிக் கொள்ளலாம். தாம்பரம் பல்லாவரம் பகுதிகளில் இருப்பவர்கள் பிபி-21 ல் மந்தைவெளி வரை வந்து (தேவநாதன் தெரு சந்திப்பு பேருந்து நிறுத்தம்) அங்கிருந்து 5-பி யில் செல்லலாம்.

சென்னையின் மற்ற பகுதிகளில் எனக்கு வீடு இல்லாத காரணத்தாலும் (ஏண்டா, மந்தைவெளில மட்டும் சொந்த வீட்லயாடா இருந்தே), அந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு இல்லாமல் போனதாலும் பேருந்து மார்க்கங்கள் சரியாகத் தெரியாது. மற்ற இடங்களில் இருப்பவர்கள் தி.நகர் வந்துவிட்டால் 5-பி யைப் பிடிக்கலாம்.

தொடர்ந்து வருவது நான் சொல்ல வந்த வாயுத் தொல்லை பற்றியவை. இந்த வாயுத் தொல்லைக்கு உருளைக் கிழங்கு, பட்டாணி, துவரம் பருப்பு போன்றவை காரணம் இல்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஐ.ஓ.சி, பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரின் கூட்டு சதி, பொறியல் சதி, இன்ன பிற வெஞ்சன (சைட் டிஷ்) சதிகள்தான் இந்த வாயுத் தொல்லைக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஐ.ஓ.சி உள்ளிட்ட நாட்டுடைமை ஆக்கப்பட்ட எரிவாயுக் கம்பெனிகள் புதிய இணைப்புகள் வழங்கப் போவதில்லை என்ற முடிவை மத்திய அரசுக்குத் தெரியப் படுத்தியுள்ளன. மத்திய அரசு எண்ணை நிறுவனங்களின் பரிந்துரையை ஏற்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதனால் நாட்டுமக்களுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

பரிந்துரை 1: வயது நாற்பதை நெருங்கினாலும் திருமணம் செய்யும் முடிவைத் தள்ளிப் போட வேண்டுமாம்.

பரிந்துரை 2: அப்படியே திருமணம் செய்தாலும் தனிக்குடித்தனம் போகக் கூடாதாம்.

பரிந்துரை 3: அப்படியே போனாலும் மறு அறிவிப்பு வரும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதாம்.

பரிந்துரை 4: அப்படியே பெற்றுக் கொண்டாலும் குழந்தைகளுக்கு இலை, தழை, பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்ணக் கொடுக்க வேண்டுமாம்.

பரிந்துரை 5: எரிவாயு, நெருப்பு உள்ளிட்ட வார்த்தைகளை சொல்லுவது தண்டணைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படுமாம். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாம்.

இது போல் மேலும் இருபது பரிந்துரைகள் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி கடிதமெழுதியுள்ளார். கடிதத்தில் எண்ணை நிறுவனங்களின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவைக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்ததாகவும், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்னசாமி மூலமாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உங்களை விட அதிக எம்.பி க்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் சொல்லியே நாங்கள் கேட்கவில்லை. வெறும் பதினைந்து எம்.பி க்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதில் தங்களுக்கு எந்த சிரமமும் இல்லைஎன்று தெரிவித்ததாகவும் புருடா டாட் காம் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட சிலிண்டர்களின் மீது விளம்பரங்கள் வெளியிடலாம் என்றும், தன்னுடைய இந்த ஆலோசனையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் மக்கள் தொலைக்காட்சி மற்றும் பசுமைத் தாயகம் பத்திரிகையின் விளம்பரங்களை சிலிண்டர்களில் வெளியிட பா.ம.க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அரசின் இம்முடிவு வரைவு நிலையில் இருந்தாலும், அதை எதிர்த்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் போராட்டம் நடத்துகிறவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்என்று அனல் தெறிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். (தெறித்த அனலில் நிருபர்கள் சிலர் தம்பற்றவைத்துக் கொண்டதாக பத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.)

டிஸ்கி 1: லேகியம் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு மேல் விலையுள்ளதாக இருந்தாலும், டப்பா செட்டி கடை மருந்து பலனளிக்காமல் போனாலும் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. மேலதிக விபரங்களுக்கு காண்ட்டாக்ட் மயிலை முண்டகக் கன்னி”.

டிஸ்கி 2: மேற்சொன்ன பேருந்து வழித்தடங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதற்கும் நான் பொறுப்பல்ல. மே.அ. விபரங்களுக்கு காண்ட்டாக்ட் கே.என். நேரு, மாமா ஆஃப் மாவீரன் நெப்போலியன்.

டிஸ்கி 3: எண்ணை நிறுவனங்களின் இம்முடிவு மக்கள் விரோதமானது, வேதனை தருவது என்றாலும், நம்மை நாமே பகடி செய்து ஆற்றிக்கொள்ள வேண்டியிருப்பதால்தான் இந்த பதிவை எழுதியுள்ளேன். மே.அ.வி. வேண்டுமென்றால் பின்னூட்டம் போடவும். ப.சி, ம.மோ.சி ஆகியோருக்கு ரிப்ளை கார்டுடன் கடிதம் எழுதித் தெரியப்படுத்துவேன். மயிலை முண்டகக் கன்னி மேல் சத்தியமாக பதில் வந்தால் நிச்சயம் பதிவாக போடுவேன்.

டிஸ்கி 4: டிஸ்கி 3 இதய சுத்தியுடன் உன்மையாக எழுதியது. ஆமென்.

7 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  2. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  3. வாங்க ஆப்பிசர்.

    நீங்க இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது. உங்களுக்கு சிரமம் குடுக்காம சென்னைலேந்து நானே லேகியம் வாங்கி அனுப்பிடுறேன் ஆப்பிசர்.

  4. விஜய்கோ அண்ணா!
    http://www.lathananthpakkam.blogspot.com
    பாத்தீங்களா?

  5. வாங்க!!! உங்க பையன் வயசிருக்கற என்னைப் போயி அண்ணான்னு சொல்லி போட்டீங்களே. ஞாயமா இது? பெறகு நான் செல்வேந்திரன் ஐயாவோட சேந்து உங்களுக்கு இன்னொரு புது பேரு வைக்க வேண்டியிருக்கும். வேணாம், அளுதுருவேன்.

  6. உங்கள் நகைச்சுவை உணர்வு எழுத்துக்களில் பளிச்சிடுகிறது… நல்லாயிருங்க சாமி..

  7. மாப்ளே!
    என்னோட Blogspot பாத்தீங்களா? இப்ப comment தாராளமா அனுபலாம்.


பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.